உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..!
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Tuesday, December 8, 2009
Sunday, November 29, 2009
கடைசி பயணம்
மண்ணிற்குள் உடல்...
அழும் உறவுகள்..!
காசுக்காக காத்திருக்கும்
வெட்டியான்..!
அழும் உறவுகள்..!
காசுக்காக காத்திருக்கும்
வெட்டியான்..!
-சே.குமார்
Labels:
காதல்,
சமூகம்,
நட்பு கவிதை
Saturday, November 28, 2009
காதல்
ஓடி வந்து பேருந்தில்
ஏறினாய் நீ..!
பயத்தில் நகம்
கடித்தேன் நான்..!
மனசுக்குள்
தெய்வங்கள்..!
ஏறினாய் நீ..!
பயத்தில் நகம்
கடித்தேன் நான்..!
மனசுக்குள்
தெய்வங்கள்..!
-சே.குமார்
Tuesday, November 24, 2009
ஞாபகமாய்..!
ஞாபக மறதியாய்
நீ விட்டுச் சென்ற
பேனா...
ஞாபகமாய்
என் பாக்கெட்டில்..!
நீ விட்டுச் சென்ற
பேனா...
ஞாபகமாய்
என் பாக்கெட்டில்..!
-சே.குமார்
Labels:
காதல்,
சமூகம்,
நட்பு கவிதை
Sunday, November 22, 2009
சங்கமம்
உனக்கும் எனக்குமான
சந்திப்பில் சங்கமிப்பது
என்னவோ கண்கள்தான்
இருந்தும் படபடக்குது
மனசு..!
சந்திப்பில் சங்கமிப்பது
என்னவோ கண்கள்தான்
இருந்தும் படபடக்குது
மனசு..!
-சே.குமார்
Labels:
காதல்,
நட்பு கவிதை
Saturday, November 21, 2009
கனம்
உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது
கையிலிருக்கும்
செல்போன்..!
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது
கையிலிருக்கும்
செல்போன்..!
-சே.குமார்
Labels:
காதல்,
நட்பு கவிதை
பயணம்
மனதிற்குள் பயமிருந்தாலும்
சுகமாய்த்தான் இருந்தது
துப்பட்டாவால் முகம்
மறைத்து உன்னுடன்
நிகழ்ந்த பயணம்..!
சுகமாய்த்தான் இருந்தது
துப்பட்டாவால் முகம்
மறைத்து உன்னுடன்
நிகழ்ந்த பயணம்..!
-சே.குமார்
Labels:
காதல்,
நட்பு கவிதை
Friday, November 20, 2009
நொடி..!
நீ மணி முள்ளாக
இருந்தால் நான்
நொடி முள்ளாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்...
அப்பொழுதுதானே
நிமிடத்திற்கு ஒருமுறை
உன்னைச் சந்திக்கமுடியும்..!
இருந்தால் நான்
நொடி முள்ளாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்...
அப்பொழுதுதானே
நிமிடத்திற்கு ஒருமுறை
உன்னைச் சந்திக்கமுடியும்..!
-சே.குமார்
Labels:
காதல்,
நட்பு கவிதை
மௌனம்
நீ மௌனத்தால்
கொல்லாதே...
எனக்கு மௌனத்தை
கொல்வது எப்படி
என்று தெரியாது பெண்ணே...!
கொல்லாதே...
எனக்கு மௌனத்தை
கொல்வது எப்படி
என்று தெரியாது பெண்ணே...!
Labels:
காதல்,
நட்பு கவிதை
Wednesday, November 18, 2009
திரும்பாமல்...
நீ திரும்பிச் சிரிக்கும்
ஒற்றைச் சிரிப்புக்காக
திரும்பாமல் தவித்தது
மனசு..!
ஒற்றைச் சிரிப்புக்காக
திரும்பாமல் தவித்தது
மனசு..!
-சே.குமார்
Labels:
காதல்,
நட்பு கவிதை
Saturday, November 14, 2009
பட்டிமன்றம்
நீ சூடியதால்
பூ அழகா..?
பூச் சூடியதால்
நீ அழகா..?
என்னுள்ளே
பட்டிமன்றம்..!
பூ அழகா..?
பூச் சூடியதால்
நீ அழகா..?
என்னுள்ளே
பட்டிமன்றம்..!
-சே.குமார்
Labels:
காதல்,
நட்பு கவிதை
Wednesday, November 11, 2009
குளியல்
அருவித் தண்ணியோ..!
குளத்துத் தண்ணியோ..!
சுகம் என்னவோ...
உன் கைபட்ட
குழாய் தண்ணீர்
குளியலில்தான்..!
குளத்துத் தண்ணியோ..!
சுகம் என்னவோ...
உன் கைபட்ட
குழாய் தண்ணீர்
குளியலில்தான்..!
-சே.குமார்
Saturday, November 7, 2009
பூ..!
மலரும்போதே
மனசுக்குள்...
சாமிக்கா..?
சாவுக்கா..?
(சில வருடங்களுக்கு முன் பாக்யா இதழில் வெளியான படத்திற்கு எழுதப்பட்டு தேர்வான மூன்று ஹைக்கூ கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி பாக்யா)
மனசுக்குள்...
சாமிக்கா..?
சாவுக்கா..?
(சில வருடங்களுக்கு முன் பாக்யா இதழில் வெளியான படத்திற்கு எழுதப்பட்டு தேர்வான மூன்று ஹைக்கூ கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி பாக்யா)
-சே. குமார்
Friday, November 6, 2009
அலை
ஆர்ப்பரிக்கும் அலை...
குதூகலமாய் சிறுமி..!
குடும்ப சண்டைக்குள்
நிம்மதி இழந்த பெற்றோர்..!
குதூகலமாய் சிறுமி..!
குடும்ப சண்டைக்குள்
நிம்மதி இழந்த பெற்றோர்..!
-சே.குமார்
Wednesday, November 4, 2009
திருமணம்
கோலாகலமாய்
திருமணம்..!
சமையல் மேஸ்திரி
மனதில் சங்கடம்...
முதிர்கன்னியாய் மகள்..!
திருமணம்..!
சமையல் மேஸ்திரி
மனதில் சங்கடம்...
முதிர்கன்னியாய் மகள்..!
-சே.குமார்
Subscribe to:
Posts (Atom)