வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: February 2010

Sunday, February 28, 2010

தடுமாற்றம்

ரகசியமாய் ஒருமுறை...
நீயும் திரும்ப...
நானும் திரும்ப...
தடுமாறியது இதயம்..!
 
-சே.குமார்




Saturday, February 27, 2010

பூத்துளி

மண் மீது மழைத்துளி...
சிதறிய மணல்
உன் காலில் பூக்களாய்..!

-சே.குமார்




Tuesday, February 23, 2010

மனசு..!

வயலில் தாய்...
வரப்பில் குழந்தை...
இருவருக்கும் இடையில்
அல்லாடும் மனசு..!

-சே.குமார்



Friday, February 19, 2010

ஆற்றாமை

பார்த்துப் பார்த்து
கட்டிய வீட்டில்
பதுங்கியது பாம்பு...
ஆற்றாமையால்
கதறியது குருவி..!

-சே.குமார்




Tuesday, February 16, 2010

ஒற்றை ரோஜா

ஆயிரம் ரோஜா பூத்திருந்தாலும்
அழகு என்னவோ
உன் தலையில் இருக்கும்
ஒற்றை ரோஜாவுக்குத்தான்..!

-சே.குமார்




Saturday, February 13, 2010

ஏக்கம்

கருகமணி ஆடும்
கழுத்தில் மஞ்சள் கயிறு
ஆடுவது எப்போது..?
ஏக்கமாய் முதிர்கன்னி..!

-சே.குமார்




Wednesday, February 10, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...

நெற்றி நிறைய பொட்டு...
தலை நிறைய மல்லிகை...
வீடெங்கும் தலைகள்...
கூடத்தில் தாலி அறுக்கும்
வைபோக ஏற்பாடுகள்..!

-சே.குமார்




Tuesday, February 9, 2010

வறண்ட பூமி..!

கூட்டமாய் குருவிகள்...
பசியாற வழியில்லாமல்
வறண்ட பூமி..!

-சே.குமார்




Monday, February 8, 2010

உறவுகளைத் தேடி...

தொலைந்த உறவுகளைத் தேடி
கடலோரத்தில் காவலாய்...
சுனாமி அலையால்
பைத்தியமான பாலகன்..!

-சே.குமார்




Sunday, February 7, 2010

ஆடை

குளிர்-
ஆடையின்றி அலையும்
குட்டிக்கு ஆடையானது
தாய்..!

-சே.குமார்




Saturday, February 6, 2010

இருட்டு

இருட்டுக்குள் அய்யனார்
வெளிச்சத்தை தேடி...
வெளிச்ச வீதியில்
இருட்டு மனங்கள்..!

-சே.குமார்




Thursday, February 4, 2010

ஏளனம்...

எதிர் காற்றில் தள்ளாடியபடி
சைக்கிளை மிதிக்கும் முதுமை...
தள்ளிப்பார்த்தது காற்று..!

-சே.குமார்




Wednesday, February 3, 2010

செடி

மாலைக்குள் மலருமா..?
நட்ட செடிக்குப்
பக்கத்தில் நடாத
செடியாய் குழந்தை..!



Tuesday, February 2, 2010

குரல்

ஆந்தை அலறினால்
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!