வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: சமூககவிதை
Showing posts with label சமூககவிதை. Show all posts
Showing posts with label சமூககவிதை. Show all posts

Saturday, April 24, 2010

வேதனை

வற்றிய மடியில்
பால் குடிக்க காத்திருக்கும்
கன்றுக்கு இல்லாமல்
பீச்சப்பட்டது பால்...
வேதனையோடு கத்தியது பசு..!

-'பரிவை' சே.குமார்.




Wednesday, April 7, 2010

பறிக்காதீர்கள்

இது கிறுக்கல்களில் 100வது கவிதை...
ஆறு மாத காலத்தில் நான் கு வலைப்பூவில் 200க்கு மேல் எழுதியிருந்தாலும் ஒரே வலையில் 100 ஹைக்கூ என்பது எனக்கு நிச்சயமாக சாதாரண விசயமல்ல... இதற்கு நான் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டும் வாக்களித்தும் உற்சாகம் அளித்துவரும் நட்புக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!


-'பரியன் வயல்' சே.குமார்.




Wednesday, March 31, 2010

வன்முறை..!

புற்களின் மீது வன்முறை
சமாதானமாய்
கலைந்தபோது
மரணித்திருந்தது புல்..!

-'பரியன் வயல்' சே.குமார்


(தோழி பத்மா சன்ஷைன் அவார்டை தூக்கி நமக்கு கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு நன்றி. அப்புறம் நம்ம பிறந்து இன்னும் ஆறு மாதம்தான் ஆகுது. அதனால நாம மத்தவங்களுக்கு கொடுக்கிறது நல்லாயில்லை. அதனால நா யாருக்கும் கொடுக்க நினைக்கலை. சின்னப்புள்ள பெரியவங்களுக்கு கொடுத்தா நல்லா இருக்காததுல்லங்க... ---- நட்புடன் கிறுக்கல்கள்.)




Wednesday, February 10, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...

நெற்றி நிறைய பொட்டு...
தலை நிறைய மல்லிகை...
வீடெங்கும் தலைகள்...
கூடத்தில் தாலி அறுக்கும்
வைபோக ஏற்பாடுகள்..!

-சே.குமார்




Sunday, February 7, 2010

ஆடை

குளிர்-
ஆடையின்றி அலையும்
குட்டிக்கு ஆடையானது
தாய்..!

-சே.குமார்