வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: December 2009

Saturday, December 26, 2009

பிரிவு

ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!

-சே.குமார்




Friday, December 25, 2009

தாலாட்டு..!

தாலாட்டு..!
சந்தோஷ தூக்கம்
குழந்தைக்கு...
பழைய நினைவுகளை
திரும்பிப் பார்த்த
சோகத்தில் தாய்..!

-சே.குமார்




Tuesday, December 22, 2009

பயணம்

மணிக்கணக்கில்
பேசினாலும் மனதிற்குள்..
இறங்கும் இடம்
தேடும் பயணம்..!



Thursday, December 17, 2009

கொலுசொலி..!

தெருவில் நீ போவதை
என் காதில் வந்து
சொல்லிச் சென்றது
கொலுசொலி..!

-சே.குமார்




Wednesday, December 16, 2009

எதிர் எதிரே...

சாமி ஊர்வலமும்
சவ ஊர்வலமும்
எதிர் எதிரே...
சிரித்துக் கொண்டன
பூக்கள்..!



Sunday, December 13, 2009

பசி

ஊர்வலமாய் அம்மன்
எரியப்பட்டது காசு..!
வயிற்றுப்பசியுடன்
வயோதிகர்..!

-சே.குமார்




Saturday, December 12, 2009

காணவில்லை

நேற்று முதல் காற்றைக்
காணவில்லை..!
வீழ்ந்து கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

-சே.குமார்




Friday, December 11, 2009

பயன்

வீட்டிற்கு ஒரு
மரம் வளர்ப்போம்...
நாங்களும் வளர்க்கிறோம்...
இதுவரை பயன் தராத
இரண்டு மகன்களை..!

-சே.குமார்




Wednesday, December 9, 2009

கல்லறைகள்

எதிர்ப்பின்றி
பேசி சிரித்தோம்...
எதிர் எதிரே
நம் கல்லறைகள்..!

-சே.குமார்




Tuesday, December 8, 2009

உனக்காக...

உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..!



Sunday, December 6, 2009

தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி..!
அவசரமாக
வாங்கப்பட்டது
வட்டியில்லாக் கடன்..!

-சே.குமார்




Saturday, December 5, 2009

சுதந்திரம்

சுதந்திரம் வேண்டி
மாட்டின் மேல்
ஊர்வலம்..!
எங்கே போனது
சுதந்திரம்..?
-சே.குமார்