கஷ்டப்பட்டு
வருணபகவானை
ரோட்டில் வரைந்து
நிமிர்ந்த போது
அழித்துச் சென்றது
மழை..!
Showing posts with label சமூக கவிதை. Show all posts
Showing posts with label சமூக கவிதை. Show all posts
Wednesday, May 12, 2010
Saturday, May 1, 2010
இல்லாமை..!
கிழிந்த சேலையை
மறைக்க முயன்ற கையில்
முதலாளியம்மாவின்
பட்டுச்சேலை..!
மறைக்க முயன்ற கையில்
முதலாளியம்மாவின்
பட்டுச்சேலை..!
-'பரிவை' சே.குமார்.
Labels:
சமூக கவிதை
Wednesday, April 14, 2010
ராசி
பன்றி மீது மோதிய வண்டி
ராசியில்லை என்று
விற்று விட்டாய்...
ஓட்டிய உன்னை...?
ராசியில்லை என்று
விற்று விட்டாய்...
ஓட்டிய உன்னை...?
-'பரிவை' சே.குமார்.
Labels:
சமூக கவிதை
Wednesday, March 17, 2010
வெளுத்ததால்...
வெளுத்து வாங்கியது
அடை மழை..!
வெளுக்கப் போகாததால்
பட்டினியாய் சலவைக்காரர்..!
அடை மழை..!
வெளுக்கப் போகாததால்
பட்டினியாய் சலவைக்காரர்..!
'பரியன் வயல்' சே.குமார்
Labels:
சமூக கவிதை
Tuesday, February 23, 2010
மனசு..!
வயலில் தாய்...
வரப்பில் குழந்தை...
இருவருக்கும் இடையில்
அல்லாடும் மனசு..!
-சே.குமார்
வரப்பில் குழந்தை...
இருவருக்கும் இடையில்
அல்லாடும் மனசு..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Friday, February 19, 2010
ஆற்றாமை
பார்த்துப் பார்த்து
கட்டிய வீட்டில்
பதுங்கியது பாம்பு...
ஆற்றாமையால்
கதறியது குருவி..!
கட்டிய வீட்டில்
பதுங்கியது பாம்பு...
ஆற்றாமையால்
கதறியது குருவி..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Saturday, February 13, 2010
ஏக்கம்
கருகமணி ஆடும்
கழுத்தில் மஞ்சள் கயிறு
ஆடுவது எப்போது..?
ஏக்கமாய் முதிர்கன்னி..!
கழுத்தில் மஞ்சள் கயிறு
ஆடுவது எப்போது..?
ஏக்கமாய் முதிர்கன்னி..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Saturday, February 6, 2010
இருட்டு
இருட்டுக்குள் அய்யனார்
வெளிச்சத்தை தேடி...
வெளிச்ச வீதியில்
இருட்டு மனங்கள்..!
வெளிச்சத்தை தேடி...
வெளிச்ச வீதியில்
இருட்டு மனங்கள்..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Thursday, February 4, 2010
ஏளனம்...
எதிர் காற்றில் தள்ளாடியபடி
சைக்கிளை மிதிக்கும் முதுமை...
தள்ளிப்பார்த்தது காற்று..!
சைக்கிளை மிதிக்கும் முதுமை...
தள்ளிப்பார்த்தது காற்று..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Tuesday, February 2, 2010
குரல்
ஆந்தை அலறினால்
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!
Labels:
சமூக கவிதை
Wednesday, January 27, 2010
மனிதாபிமானம்..!
கிளறிய குப்பைக்குள்
துடித்த பூச்சியை
விட்டுச் சென்றது கோழி...
மனிதாபிமானம்..!
துடித்த பூச்சியை
விட்டுச் சென்றது கோழி...
மனிதாபிமானம்..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Monday, January 25, 2010
Saturday, January 23, 2010
Tuesday, January 12, 2010
அனாதை
அம்மாவின் மடியில்
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!
-சே.குமார்.
Labels:
சமூக கவிதை
Saturday, December 26, 2009
பிரிவு
ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Wednesday, December 16, 2009
எதிர் எதிரே...
சாமி ஊர்வலமும்
சவ ஊர்வலமும்
எதிர் எதிரே...
சிரித்துக் கொண்டன
பூக்கள்..!
சவ ஊர்வலமும்
எதிர் எதிரே...
சிரித்துக் கொண்டன
பூக்கள்..!
Labels:
சமூக கவிதை
Sunday, December 13, 2009
பசி
ஊர்வலமாய் அம்மன்
எரியப்பட்டது காசு..!
வயிற்றுப்பசியுடன்
வயோதிகர்..!
எரியப்பட்டது காசு..!
வயிற்றுப்பசியுடன்
வயோதிகர்..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Friday, December 11, 2009
பயன்
வீட்டிற்கு ஒரு
மரம் வளர்ப்போம்...
நாங்களும் வளர்க்கிறோம்...
இதுவரை பயன் தராத
இரண்டு மகன்களை..!
மரம் வளர்ப்போம்...
நாங்களும் வளர்க்கிறோம்...
இதுவரை பயன் தராத
இரண்டு மகன்களை..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Sunday, December 6, 2009
தள்ளுபடி
ஆடித் தள்ளுபடி..!
அவசரமாக
வாங்கப்பட்டது
வட்டியில்லாக் கடன்..!
அவசரமாக
வாங்கப்பட்டது
வட்டியில்லாக் கடன்..!
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Saturday, December 5, 2009
சுதந்திரம்
சுதந்திரம் வேண்டி
மாட்டின் மேல்
ஊர்வலம்..!
எங்கே போனது
சுதந்திரம்..?
மாட்டின் மேல்
ஊர்வலம்..!
எங்கே போனது
சுதந்திரம்..?
-சே.குமார்
Labels:
சமூக கவிதை
Subscribe to:
Posts (Atom)
