வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: சமூக கவிதை
Showing posts with label சமூக கவிதை. Show all posts
Showing posts with label சமூக கவிதை. Show all posts

Wednesday, May 12, 2010

மழை..!

கஷ்டப்பட்டு
வருணபகவானை
ரோட்டில் வரைந்து
நிமிர்ந்த போது
அழித்துச் சென்றது
மழை..!



Saturday, May 1, 2010

இல்லாமை..!

கிழிந்த சேலையை
மறைக்க முயன்ற கையில்
முதலாளியம்மாவின்
பட்டுச்சேலை..!

-'பரிவை' சே.குமார்.




Wednesday, April 14, 2010

ராசி

பன்றி மீது மோதிய வண்டி
ராசியில்லை என்று
விற்று விட்டாய்...
ஓட்டிய உன்னை...?


-'பரிவை' சே.குமார்.




Wednesday, March 17, 2010

வெளுத்ததால்...

வெளுத்து வாங்கியது
அடை மழை..!
வெளுக்கப் போகாததால்
பட்டினியாய் சலவைக்காரர்..!

'பரியன் வயல்' சே.குமார்




Tuesday, February 23, 2010

மனசு..!

வயலில் தாய்...
வரப்பில் குழந்தை...
இருவருக்கும் இடையில்
அல்லாடும் மனசு..!

-சே.குமார்



Friday, February 19, 2010

ஆற்றாமை

பார்த்துப் பார்த்து
கட்டிய வீட்டில்
பதுங்கியது பாம்பு...
ஆற்றாமையால்
கதறியது குருவி..!

-சே.குமார்




Saturday, February 13, 2010

ஏக்கம்

கருகமணி ஆடும்
கழுத்தில் மஞ்சள் கயிறு
ஆடுவது எப்போது..?
ஏக்கமாய் முதிர்கன்னி..!

-சே.குமார்




Saturday, February 6, 2010

இருட்டு

இருட்டுக்குள் அய்யனார்
வெளிச்சத்தை தேடி...
வெளிச்ச வீதியில்
இருட்டு மனங்கள்..!

-சே.குமார்




Thursday, February 4, 2010

ஏளனம்...

எதிர் காற்றில் தள்ளாடியபடி
சைக்கிளை மிதிக்கும் முதுமை...
தள்ளிப்பார்த்தது காற்று..!

-சே.குமார்




Tuesday, February 2, 2010

குரல்

ஆந்தை அலறினால்
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!



Wednesday, January 27, 2010

மனிதாபிமானம்..!

கிளறிய குப்பைக்குள்
துடித்த பூச்சியை
விட்டுச் சென்றது கோழி...
மனிதாபிமானம்..!

-சே.குமார்




Monday, January 25, 2010

விதவை

கோபுர வாசலில்
கோலமிடும் பெண்...
கோலம் இழந்து...
இளம் விதவை..!

-சே.குமார்




Saturday, January 23, 2010

ஆக்ரோஷம்

வீழ்ந்து எழுந்தாலும்
வீறாப்பு குறையாமல்
ஆக்ரோஷமாய்...
சண்டை சேவல்..!



Tuesday, January 12, 2010

அனாதை

அம்மாவின் மடியில்
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!

-சே.குமார்.




Saturday, December 26, 2009

பிரிவு

ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!

-சே.குமார்




Wednesday, December 16, 2009

எதிர் எதிரே...

சாமி ஊர்வலமும்
சவ ஊர்வலமும்
எதிர் எதிரே...
சிரித்துக் கொண்டன
பூக்கள்..!



Sunday, December 13, 2009

பசி

ஊர்வலமாய் அம்மன்
எரியப்பட்டது காசு..!
வயிற்றுப்பசியுடன்
வயோதிகர்..!

-சே.குமார்




Friday, December 11, 2009

பயன்

வீட்டிற்கு ஒரு
மரம் வளர்ப்போம்...
நாங்களும் வளர்க்கிறோம்...
இதுவரை பயன் தராத
இரண்டு மகன்களை..!

-சே.குமார்




Sunday, December 6, 2009

தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி..!
அவசரமாக
வாங்கப்பட்டது
வட்டியில்லாக் கடன்..!

-சே.குமார்




Saturday, December 5, 2009

சுதந்திரம்

சுதந்திரம் வேண்டி
மாட்டின் மேல்
ஊர்வலம்..!
எங்கே போனது
சுதந்திரம்..?
-சே.குமார்