கிறுக்கல்கள்: August 2009
அடிமைச் சிறை
அவதிப்பட்டது...
கூண்டுக்கிளி..
-சே.குமார்
பரியன்வயல்
உனக்காக காத்திருந்த
பொழுதுகளில்
ஊனமானது நொடிமுள்..!
-சே.குமார்
பரியன்வயல்
அழகு ஆபத்து...
சிறகிழந்தது
வண்ணத்துப் பூச்சி..!
-சே.குமார்
பரியன்வயல்
மறக்க முயன்றும்
மறக்க முடியவில்லை...
மனசுக்குள் ஆலமரமாய்...
முதல் காதல்..!
-சே.குமார்
பரியன்வயல்
ஊருக்குள் நாம்
உரசிக்கொள்வது கூட
இல்லை - எப்படியோ
பற்றிக்கொண்டது நம்
காதல் 'தீ'...!
-சே.குமார்
பரியன்வயல்
ஊனம்-
பேருந்தில் அருகில்
நின்ற பாட்டிக்கு
இடம் தர மறுத்தது
மனசு..!
-சே.குமார்
பரியன்வயல்
காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற
நாட்களே அதிகம்...!
சே.குமார்
பரியன் வயல்