வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: January 2010

Thursday, January 28, 2010

காய்ந்த கல்

தண்ணீர் வேண்டி
பாட்டிலுக்குள்
கல் எடுத்துப்
போட்டது காகம்...
தண்ணீரைக் குடித்தது
காய்ந்த கல்..!

-சே.குமார்




Wednesday, January 27, 2010

மனிதாபிமானம்..!

கிளறிய குப்பைக்குள்
துடித்த பூச்சியை
விட்டுச் சென்றது கோழி...
மனிதாபிமானம்..!

-சே.குமார்




Monday, January 25, 2010

விதவை

கோபுர வாசலில்
கோலமிடும் பெண்...
கோலம் இழந்து...
இளம் விதவை..!

-சே.குமார்




Saturday, January 23, 2010

ஆக்ரோஷம்

வீழ்ந்து எழுந்தாலும்
வீறாப்பு குறையாமல்
ஆக்ரோஷமாய்...
சண்டை சேவல்..!



Thursday, January 21, 2010

ஏங்கும் மனசு..!

எப்போது வருவாய்?
தொலைந்த உன்
நினைவுகளைத்
தொலைக்காமல்
ஏங்கிக் கிடக்கிறது மனசு..!



பயண நட்பு

நீண்ட பெருமூச்சுடன்
நின்றது புகைவண்டி..!
சிநேகமாய் சிரித்து
இறங்கியபோது
தண்டவாளமானது
பயண நட்பு..!


(வலையுலக நட்புக்கு எனது 'தொடரும்பொழுதுகள்'  (http://skvishal09.blogspot.com/2009/12/blog-post_18.html) என்ற கவிதை சங்கமம் உரையாடல் கவிதைப் போட்டிலும்

எனது சிறுகதையான "பார்வைகள்" அன்புடன் ராட் மாதவ்  (http://simpleblabla.blogspot.com/2009/12/blog-post.html ) வலைப்பூ நடத்தும் சிறுகதை போட்டியிலும் களத்தில் இருக்கின்றன. தாங்கள் படித்துப் பிடித்தால் ஓட்டும் பின்னூட்டமும் மறக்காமல் இடுங்கள் - நட்புடன் சே.குமார்)




Tuesday, January 19, 2010

இருட்டு

அமாவாசை இருட்டு...
பாண்டி கோவில் வாசல்
பல்லாங்குழி ஆடும் மனசு..!



Friday, January 15, 2010

காதல் பரிசு

காதல் பரிசாய் நீ
கொடுத்த தாஜ்மகாலைப்
பார்த்து சிரிக்கிறது
இடுப்பில் இருக்கும்
என் குழந்தை..!

-சே.குமார்.




Tuesday, January 12, 2010

அனாதை

அம்மாவின் மடியில்
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!

-சே.குமார்.




Friday, January 8, 2010

குடைக்குள்...

மழையில் நனைந்தால்
உனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்பதால்
குடைக்குள் நான்..!

-சே.குமார்




Monday, January 4, 2010

சிலை

சிலை முன்னே
நீயும்... நானும்...
காதலை சொல்ல
முடியாமல் சிலைகளாய்..!

-சே.குமார்




Friday, January 1, 2010

கவலை

கற்பு பற்றிய
கவலையோடு பூக்கள்..!
ஊர்வலமாய் வண்டுகள்..!



காதலிக்காக...

புற்களே...
பூக்களைத் தூவுங்கள்
செருப்பில்லாமல்
என் காதலி..!