வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்

Friday, March 26, 2010

மரண உறவு

மரணத்தின் பாதையை
அறியாமல் காற்றோடு
உறவாடியது இலை..!
வெட்டுப்பட்டது மரம்..!

-'பரியன் வயல்' சே.குமார்.




Tuesday, March 23, 2010

இதயத் திருடி

காந்தக் கண்ணாம்..!
வசீகரிக்கும் உதடாம்..!
உடுக்கு இடையாம்..!
தந்தக் கால்களாம்..!
ஆளாளுக்கு உளறல்..!
நீ இதயத் திருடி என்பது
அவர்களுக்குத் தெரியுமா..?

-'பரியன் வயல்' சே.குமார்




Sunday, March 21, 2010

அடிமை

உன் கொலுசிற்குள்
என்ன வைத்துள்ளாய்...!
அதன் சிணுங்கலில்
அடிமையாய் மனசு...!

-'பரியன் வயல்' சே.குமார்.




Wednesday, March 17, 2010

வெளுத்ததால்...

வெளுத்து வாங்கியது
அடை மழை..!
வெளுக்கப் போகாததால்
பட்டினியாய் சலவைக்காரர்..!

'பரியன் வயல்' சே.குமார்




Thursday, March 11, 2010

சொல்லாத காதல்

குடைக்குள் நாம்
 உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!

--'பரியன் வயல்' சே.குமார்




Tuesday, March 9, 2010

தவம்

நீ பூக்கும்
சிறு புன்னகைக்காக
நீண்ட நேரமாய்
வெயிலில் நீறு பூக்க..!

-'பரியன்வயல்' சே.குமார்




Sunday, February 28, 2010

தடுமாற்றம்

ரகசியமாய் ஒருமுறை...
நீயும் திரும்ப...
நானும் திரும்ப...
தடுமாறியது இதயம்..!
 
-சே.குமார்




Saturday, February 27, 2010

பூத்துளி

மண் மீது மழைத்துளி...
சிதறிய மணல்
உன் காலில் பூக்களாய்..!

-சே.குமார்




Tuesday, February 23, 2010

மனசு..!

வயலில் தாய்...
வரப்பில் குழந்தை...
இருவருக்கும் இடையில்
அல்லாடும் மனசு..!

-சே.குமார்



Friday, February 19, 2010

ஆற்றாமை

பார்த்துப் பார்த்து
கட்டிய வீட்டில்
பதுங்கியது பாம்பு...
ஆற்றாமையால்
கதறியது குருவி..!

-சே.குமார்