வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்

Wednesday, November 11, 2009

விளை நிலம்

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..!

-சே.குமார்




Saturday, November 7, 2009

பூ..!

மலரும்போதே
மனசுக்குள்...
சாமிக்கா..?
சாவுக்கா..?

(சில வருடங்களுக்கு முன் பாக்யா இதழில் வெளியான படத்திற்கு எழுதப்பட்டு தேர்வான மூன்று ஹைக்கூ கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி பாக்யா)

-சே. குமார்




Friday, November 6, 2009

விவாகரத்து

ஒத்துப்போகாத
மனங்களின்
ஒருமித்த முடிவு...!

-சே.குமார்




அலை

ஆர்ப்பரிக்கும் அலை...
குதூகலமாய் சிறுமி..!
குடும்ப சண்டைக்குள்
நிம்மதி இழந்த பெற்றோர்..!

-சே.குமார்




Wednesday, November 4, 2009

ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்...
நெல்லுக்காக
கூண்டைவிட்டு
வெளியே வந்தது
கிளி..!

-சே.குமார்




திருமணம்

கோலாகலமாய்
திருமணம்..!
சமையல் மேஸ்திரி
மனதில் சங்கடம்...
முதிர்கன்னியாய் மகள்..!

-சே.குமார்




ஊர்வலம்

மாட்டின்மேல்
ஊர்வலமாய்...
மனித மாடுகள்..!

-சே.குமார்




Sunday, November 1, 2009

அழைக்காமலே

ஆயிரம் முறை அழைத்தும்
வராத காகம்...
அழைக்காமலே வந்தது...
அப்பாவுக்கு திவசம்..!

-சே.குமார்




துணை

துணைக்கு வருவாயா
தூறலே...
வெயிலில் என்னவள்..!

-சே.குமார்




அப்பா

அப்பா கொடுத்த
காசு பத்திரமாய்...
காசு கொடுத்த அப்பா..?

-சே.குமார்