வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: April 2010

Saturday, April 24, 2010

வேதனை

வற்றிய மடியில்
பால் குடிக்க காத்திருக்கும்
கன்றுக்கு இல்லாமல்
பீச்சப்பட்டது பால்...
வேதனையோடு கத்தியது பசு..!

-'பரிவை' சே.குமார்.




Saturday, April 17, 2010

மயிலிறகு

புத்தகத்துக்குள் பொத்தி வைத்த
மயிலிறகு குட்டிபோட்டதோ
இல்லையோ - உன்
கைபட்டு வந்ததால்
என்னை கட்டிப்போட்டது.!

-'பரிவை' சே.குமார்.




Wednesday, April 14, 2010

ராசி

பன்றி மீது மோதிய வண்டி
ராசியில்லை என்று
விற்று விட்டாய்...
ஓட்டிய உன்னை...?


-'பரிவை' சே.குமார்.




Sunday, April 11, 2010

நாணம்

திடீர் மழை..!
நனைந்த குமரியோ
நாணத்தோடு..!
பார்க்கும் விழிகளோ
நாணமின்றி..!

-'பரியன் வயல்' சே.குமார்



Wednesday, April 7, 2010

பறிக்காதீர்கள்

இது கிறுக்கல்களில் 100வது கவிதை...
ஆறு மாத காலத்தில் நான் கு வலைப்பூவில் 200க்கு மேல் எழுதியிருந்தாலும் ஒரே வலையில் 100 ஹைக்கூ என்பது எனக்கு நிச்சயமாக சாதாரண விசயமல்ல... இதற்கு நான் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டும் வாக்களித்தும் உற்சாகம் அளித்துவரும் நட்புக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!


-'பரியன் வயல்' சே.குமார்.




Monday, April 5, 2010

மறக்குமா..?

கண் எதிரே
கணவனுடன் நீ..!
ரணப்பட்ட இடத்தில்
ரகசிய மாநாடு...
மறக்குமா இதயம்..?

-'பரியன் வயல்' சே.குமார்.